நீட் தோல்வியால் தற்கொலை; அவமதிப்பு வழக்குக்கு முறையீடு

சென்னை : &'நீட்&' நுழைவு தேர்வில் தோல்வியடைந்த மாணவியர் தற்கொலை விவகாரத்தில், தமிழக அரசுக்கு எதிராக, அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

நடவடிக்கை :

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வால், மனம் உடைந்த மாணவி அனிதா, கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் விரக்தி அடைவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

மாணவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் உரிய பயிற்சி கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போது நடந்து முடிந்த, நீட் தேர்வில், தோல்வி அடைந்த இரண்டு மாணவியர், தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து, நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் முறையிட்டார்.

விசாரணை :

&'மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என, கோரினார். அதற்கு நீதிபதிகள், இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், வரும், ௧௨ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.