10ம் வகுப்பு பொதுத்தேர்வு: மறுகூட்டல் மற்றும் தற்காலிக சான்றிதழ் பற்றிய அறிவிப்பு




கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதிவரை நடைபெற்ற பத்தம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 09.30 மணியளவில் வெளியாகிறது. தேர்வர்கள்தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வுமுடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in / www.dge1.tn.nic.in / www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள்மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசியதகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும்கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வுமுடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வுமுடிவு அனுப்பப்படும்.

தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசிஎண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய:
மே 28ம் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிதலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப்பெற்றுக் கொள்ளலாம். 

அல்லது தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி,பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்கிற இணையதளத்தில்இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 24ம் தேதி முதல் மே 26ம் தேதி மாலை05.45 மணி வரை தாங்கள் பயின்ற பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள்தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்:

மாணவர்கள் பகுதி - 1 மொழி பாடத்திற்கு ரூ.305, பகுதி - 2 மொழி (ஆங்கிலம்) பாடத்திற்குரூ.305, பகுதி - 3 கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ரூ.205 மற்றும் பகுதி - 4 விருப்ப மொழிப்பாடத்திற்கு ரூ.205 எனக் கட்டணம் செலுத்தி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை:

மறுகூட்டலுக்கான கட்டணத்தைப் பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும்,தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்தவேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினைமாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவிண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
ஜூன்/ஜூலை மாதத்தில் துணைப் பொதுத்தேர்வு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கு அல்லதுவருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணை பொதுத்தேர்வு ஜூன் 26ம் தேதிமுதல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில்தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.