நீட் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
டெக் பார் ஆல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராம்பிரசாத் சென்னையில் நேற்று கூறியதாவது: மே 6ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் தமிழில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. சிபிஎஸ்இ புத்தகங்கள் தமிழில் இல்லாததே இதற்கு காரணம். சிறுத்தை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டிய ஒரு கேள்வியில் ‘சீட்டா’ என்ற ஆங்கில வார்த்தையை ‘சீத்தா’ என்று தவறாக மொழி பெயர்த்துள்ளனர்.
இதுபோல், மொத்தம் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாளில் மொத்தமே 180 கேள்விகள். ஓரிரு கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தால், அதை அப்படியே விட்டுவிடலாம். 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால், தமிழில் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கும் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்களை சிபிஎஸ்இ நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.