ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கக் கூடாது: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைத்து அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைத்து அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்பட்டால் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதில் தொய்வு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாரியத்தில் உள்ள பிரச்னைகளைப் போக்கி சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

0 Response to "ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கக் கூடாது: ஓபிஎஸ் வலியுறுத்தல்"

Post a Comment