பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு.
இது நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியாழ்வார் பாசுரங்களில் அமைந்த முதல் பாடலாகும். இதன் பொருள் என்னவென்றால்,கம்சன் அனுப்பிய மல்யுத்த வீரர்களை வென்ற வலிமையான தோள்களை உடைய மணிவண்ணா!
உன் சிவந்த திருவடியின் காட்சி எங்களுக்குக் காப்பாக அமைகிறது. ஆகவே, நீ பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் எங்களுக்காக வாழவேண்டும் என்பதாகும்.
0 Comments