இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள காரணத்தைச் சுட்டிக் காட்டி பிளஸ் 1 வகுப்புக்கு அதே பள்ளியில் சேர்க்கை வழங்க தனியார் பள்ளிகள் மறுக்கக் கூடாது. அதே வேளையில் பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் 1 வகுப்பின் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தால்...: ஆனால், தற்போது பிளஸ் 1 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றது, சில பாடங்களில் தோல்வி அடைந்தது ஆகிய காரணங்களைச் சுட்டிக்காட்டி அந்த மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிர்வாகம் வற்புறுத்துவதாக பெற்றோர் புகார் அளித்து வருகின்றனர்.
மாற்றுச் சான்றிதழ் பெற வற்புறுத்தக் கூடாது: பிளஸ் 1 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற, தோல்வி அடைந்த மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோரை பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக் கூடாது.