10ம் வகுப்பு, 'ரிசல்ட்' வெளியாகின்றன. முடிவுகள், மாணவர்கள் அளித்த, மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக வரும். தமிழக பள்ளிக்கல்வித் துறையின், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 20 வரை நடந்தது. 10.20 லட்சம் மாணவ - மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர்.
விடைத்தாள் திருத்தம், மே, 6ல் முடிந்தது.இதையடுத்து, மாவட்ட வாரியாக மதிப்பெண் பெற்று, இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பணிகள், நேற்று நிறைவடைந்தன.
தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி, 23ம் தேதி வெளியிடப்பட உள்ளன.மாணவர்கள் வழங்கிய, மொபைல் போன் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக, மதிப்பெண் விபரத்துடன் அனுப்பப்படும். மேலும், இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட வாரியாக, முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விபரங்கள் இடம் பெறாது