குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்வு: முதல் அமைச்சர் அறிவிப்பு

குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் அறிவித்து உள்ளார்.

டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வுக்கான வயது உச்ச வரம்பு 35-லிருந்து 37-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல் அமைச்சர் பழனிசாமி இந்த தகவலை வெளியிட்டார்.

இதன்படி, குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., ஆகிய பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 35-ல் இருந்து 37 ஆக உயர்த்தப்படுவதாகவும், மற்ற பிரிவினருக்கு 30-ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.