COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- பிளஸ் 2: விடைத்தாள்திருத்தும் பணிக்கு விலக்கு: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு
பிளஸ் 2: விடைத்தாள்திருத்தும் பணிக்கு விலக்கு: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு
தமிழ்க்கடல்
தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற எந்தத் தடையும் இல்லை என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்த அறிவிப்பை அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணிகள் அடுத்த 10 நாள்களில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தோவுகள் கடந்த மாா்ச் 2-இல் தொடங்கி, மாா்ச் 24-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தோவை சுமாா் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினா். பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணி மாா்ச் 31-இல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கரோனா நோய்த்தொற்று காரணமாக அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்பு, ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதன்பின்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், பிளஸ் 2 தோவு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், பிளஸ் 2 தோவு விடைத் தாள் திருத்தும் பணிக்கு மட்டும் விலக்கு அளித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, விடைத் தாள் திருத்தும் பணிகள் அடுத்த 10 நாள்களில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோவும் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "பிளஸ் 2: விடைத்தாள்திருத்தும் பணிக்கு விலக்கு: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு"
Post a Comment