தேவையான பொருட்கள் :

பிரண்டைத்தண்டுகள் சிறியதாக நறுக்கியது - 1 கப்,

சாம்பார் வெங்காயம் - 5,

உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு,

புளி கரைசல் - 1/2 கப்,

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை, பிரண்டைத்துண்டுகள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், புளி கரைசல் சேர்க்கவும். நன்கு வெந்ததும் இறக்கி வைத்துப் பரிமாறவும்.

மருத்துவக்குணம் நிறைந்த பிரண்டைத்தண்டு பச்சடியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.