நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதியவசதி

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லலாம் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும்புதிய வசதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம்உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல்இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நில அளவை செய்யப்படும்தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசிவாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம்ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும்வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும்.

0 Response to "நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதியவசதி"

Post a Comment