அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது.
இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..?
அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கில் நிணநீர் அதிகமாக சுரந்து தொண்டை வழியாக சளி திரவம் சுரந்துகொண்டிருக்கும். சில நேரங்கள் சளி திரவம் அடர்த்தியாக கட்டிகொள்ளும். இதனால் தொற்று வீரியம் அதிகரித்து தொண்டையில் வலியை உண்டாக்கும்.

இதனால் தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
0 Response to "தொண்டையில் சளி கட்டிக்கொண்டு பாடாய் படுத்துதா..? எளிதில் வெளியேற்ற டிப்ஸ்..!"
Post a Comment