TNPSC Group-4 : 6,244 பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்றே‌ கடைசி நாள்.!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6,244 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.


குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று இரவு 11:59 மணியுடன் நிறைவடைகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் இன்று இரவுக்குள் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை வரும் மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/1_2024-Eng.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

0 Response to "TNPSC Group-4 : 6,244 பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்றே‌ கடைசி நாள்.!!"

Post a Comment