தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில்,தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிரும், கட்டணமின்றியும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்தார். இந்த திட்டம் உடனடியாக செயல்பட்டிற்கு வந்தது.

இந்நிலையில், நகரம் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்துவது குறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதில்
ஒரு பயணி என்று நின்றாலும் அவருக்காக பேருந்தை நிறுத்தி அந்த பயணியை ஏற்றிச்செல்ல வேண்டும்.

பெண் பயணிகளிடம் கரிசனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும்.

பெண்களை எரிச்சலூட்டும் வகையிலோ, கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.

பெண்கள் பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும்.
மற்ற பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் தொடர் நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது